கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, கல்வி கொடை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன், டாக்டர் சி.ராதகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன், மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் தொடக்க உரையாற்றினார். துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர், விஜய் ராவ், டிரவல்ஸ் ரமேஷ், ராமஜெயம், சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் அப்பு, விக்னேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...