கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சி காட்சி

கோவை பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவை பேரூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.



இந்தப் பள்ளியில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளிப் படிப்பை முடித்து பிரிந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தந்த ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர்.



ஆசிரியர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள், அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். இந்த உணர்வுபூர்வமான காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. ஆசிரியர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.



நிகழ்ச்சியின் இறுதியில், முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சி பழைய நினைவுகளை மீட்டெடுத்து, ஆசிரியர்-மாணவர் உறவின் மகத்துவத்தை வெளிப்படுத்தியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...