கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சி காட்சி

கோவை பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவை பேரூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.



இந்தப் பள்ளியில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளிப் படிப்பை முடித்து பிரிந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தந்த ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர்.



ஆசிரியர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள், அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். இந்த உணர்வுபூர்வமான காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. ஆசிரியர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.



நிகழ்ச்சியின் இறுதியில், முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சி பழைய நினைவுகளை மீட்டெடுத்து, ஆசிரியர்-மாணவர் உறவின் மகத்துவத்தை வெளிப்படுத்தியது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...