கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றினார். துணைவேந்தர் ப.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



விழாவில் பதிவாளர் முனைவர் சு.இரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர், கோயம்புத்தூர் எஸ்.ஆர்.சந்திரசேகரனுக்கு அவரது சிறந்த சேவைக்காக கற்பகம் சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இவ்விழாவில் கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுதந்திர தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...