கோவை துடியலூரில் இன்று முதல் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி தொடக்கம்..!

கோவை துடியலூரில் இன்று முதல் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் இந்த கண்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் பிரம்மாண்ட துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி இன்று (ஆகஸ்ட் 15 ) முதல் நடைபெற உள்ளது. வி.ஜி. மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பிரத்யேக மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.



கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் பொருட்காட்சிக்கு வந்தால் துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்று அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.

இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்கங்கள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டி.டி. எண்டர்டெயின்மண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கோவை வாழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...