கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'வ்ருத்தி–2024' நடைபெற்றது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையுரையாற்றினார்.


Coimbatore: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'வ்ருத்தி–2024' விழா 14.08.2024, புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் விழாவில் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், "இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வு, பொதுநல நோக்கம், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வம், தொடர் முயற்சி, குறையாத உழைப்பு, தோல்வியிலும் தளராத முயற்சி மற்றும் எவர்க்கும் அன்பு செய்கிற மனிதநேயம் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



மேலும் அவர், "தன்னலத்தை மறந்து, நாட்டுக்கு நல்ல தலைவர்களாக மிளிர அரசியல் அறிவியல் சார்ந்தும் இளைஞர்கள் ஆளுமை பெற வேண்டும். வேலைவாய்ப்புக் கல்வி மட்டுமல்லாமல் மெய்ஞானக் கல்வியிலும் நாட்டம் செலுத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு உயர வேண்டும்" என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் சிறப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.



விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...