கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'வ்ருத்தி–2024' நடைபெற்றது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையுரையாற்றினார்.


Coimbatore: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'வ்ருத்தி–2024' விழா 14.08.2024, புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் விழாவில் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், "இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வு, பொதுநல நோக்கம், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வம், தொடர் முயற்சி, குறையாத உழைப்பு, தோல்வியிலும் தளராத முயற்சி மற்றும் எவர்க்கும் அன்பு செய்கிற மனிதநேயம் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



மேலும் அவர், "தன்னலத்தை மறந்து, நாட்டுக்கு நல்ல தலைவர்களாக மிளிர அரசியல் அறிவியல் சார்ந்தும் இளைஞர்கள் ஆளுமை பெற வேண்டும். வேலைவாய்ப்புக் கல்வி மட்டுமல்லாமல் மெய்ஞானக் கல்வியிலும் நாட்டம் செலுத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு உயர வேண்டும்" என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் சிறப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.



விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...