கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'வ்ருத்தி–2024' நடைபெற்றது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையுரையாற்றினார்.


Coimbatore: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'வ்ருத்தி–2024' விழா 14.08.2024, புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் விழாவில் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், "இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வு, பொதுநல நோக்கம், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வம், தொடர் முயற்சி, குறையாத உழைப்பு, தோல்வியிலும் தளராத முயற்சி மற்றும் எவர்க்கும் அன்பு செய்கிற மனிதநேயம் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



மேலும் அவர், "தன்னலத்தை மறந்து, நாட்டுக்கு நல்ல தலைவர்களாக மிளிர அரசியல் அறிவியல் சார்ந்தும் இளைஞர்கள் ஆளுமை பெற வேண்டும். வேலைவாய்ப்புக் கல்வி மட்டுமல்லாமல் மெய்ஞானக் கல்வியிலும் நாட்டம் செலுத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு உயர வேண்டும்" என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் சிறப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.



விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...