கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 'வ்ருத்தி–2024' நடைபெற்றது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையுரையாற்றினார்.


Coimbatore: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'வ்ருத்தி–2024' விழா 14.08.2024, புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் விழாவில் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், "இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வு, பொதுநல நோக்கம், புதியவற்றைக் கண்டடைகின்ற ஆர்வம், தொடர் முயற்சி, குறையாத உழைப்பு, தோல்வியிலும் தளராத முயற்சி மற்றும் எவர்க்கும் அன்பு செய்கிற மனிதநேயம் ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



மேலும் அவர், "தன்னலத்தை மறந்து, நாட்டுக்கு நல்ல தலைவர்களாக மிளிர அரசியல் அறிவியல் சார்ந்தும் இளைஞர்கள் ஆளுமை பெற வேண்டும். வேலைவாய்ப்புக் கல்வி மட்டுமல்லாமல் மெய்ஞானக் கல்வியிலும் நாட்டம் செலுத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொண்டு உயர வேண்டும்" என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் சிறப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.



விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...