திடக் கழிவு மேலாண்மை குறித்து 'நமது வார்டும் நமது வீடே' சார்பில் கலந்துரையாடல்

'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது.



அத்திட்டத்தின் 8-வது வாராமாக ஐடிசி பிரதிநிதிகள், வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களுடன் திடக் கழிவு மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டது. இப்பணிகளில் நமது வார்டும் நமது வீடே அமப்பினருடன் இணைந்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றினர்.



மேலும், இதன் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் உள்ள குளத்தினை தூர் வாரவும், அங்குள்ள கருவேல மரங்களை அழிக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சின்ன வேடம்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி துவங்கப்படும் என நமது வார்டும் நமது வீடே ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...