திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் நடத்திய கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் குமரன் நினைவகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலவச வீட்டு மனை, வேலைவாய்ப்பு முன்னுரிமை, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



முக்கிய கோரிக்கைகளில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதும், ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் அடங்கும். மேலும், ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படும் வழக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஓய்வூதியத்தை தற்போதைய நிலையில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதேபோல, ஆட்டோ எஃப்சி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...