உடுமலை மாணவி இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் 296 மாணவர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரீத்தி கடந்த ஆண்டு மார்ச் 2023-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். பின்னர் 5TN Girls Battalion NCC அலுவலகத்தின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மௌலங்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் திருச்சி NIT கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவில் 296 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இச்சாதனைக்காக உடற்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படை தலைவர் ஆகியோர் பிரீத்தியை சென்னைக்கு அழைத்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, மாணவியை கௌரவிக்கும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் 5TN Girls Battalion Commanding Officer J.M ஜோஷி கலந்துகொண்டு மாணவி பிரீத்தியையும், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கற்பகவள்ளியையும் பாராட்டினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மஞ்சுளா, கல்லூரி முதல்வர் முனைவர் பரமேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கேப்டன் முனைவர் கற்பகவள்ளி மேற்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...