கோவையில் கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை வேடப்பட்டியில் கண்ணாடி விரியன் பாம்பு கண்டுபிடிப்பு. இனப்பெருக்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் பிறக்கின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி நிபுணர் அறிவுறுத்தல்.



Coimbatore: கோவை வேடப்பட்டி பகுதியில் ஒரு வீட்டு வாசல் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தன்னார்வ அமைப்பான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு உறுப்பினரும், பாம்பு பிடி வீரருமான விக்னேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் அந்த இடத்திற்கு சென்று, பாம்பை பாதுகாப்பான முறையில் மீட்டு, வனத்துறை அறிவுறுத்தலின்படி அதன் வாழ்விடத்தில் விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கூறுகையில், "கண்ணாடி விரியன் பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இந்தியாவில் பாம்பு கடி மரணங்களில் பெரும்பாலானவை கண்ணாடி விரியன் பாம்புகளால் ஏற்படுகின்றன," என்றார்.



மேலும் அவர், "தற்போது கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு பெண் பாம்பும் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனுகின்றன. இந்த குட்டிகள் பல்வேறு இடங்களில் உலா வருகின்றன. பார்ப்பதற்கு மலைப் பாம்பு போல் இருப்பதால், இது விஷமற்றது என நினைத்து யாரும் பிடிக்க முயலக் கூடாது," என எச்சரித்தார்.

"பாம்புகளைக் கண்டால் அடித்துக் கொல்லக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு அல்லது பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, அதன் வாழ்விடத்தில் விடுவார்கள்," என்று விக்னேஷ் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் முரளி உயிரிழந்த சம்பவமும், ஒரு சிறுவன் பாம்பு கடியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...