கோவையில் கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை வேடப்பட்டியில் கண்ணாடி விரியன் பாம்பு கண்டுபிடிப்பு. இனப்பெருக்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் பிறக்கின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி நிபுணர் அறிவுறுத்தல்.



Coimbatore: கோவை வேடப்பட்டி பகுதியில் ஒரு வீட்டு வாசல் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தன்னார்வ அமைப்பான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு உறுப்பினரும், பாம்பு பிடி வீரருமான விக்னேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் அந்த இடத்திற்கு சென்று, பாம்பை பாதுகாப்பான முறையில் மீட்டு, வனத்துறை அறிவுறுத்தலின்படி அதன் வாழ்விடத்தில் விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கூறுகையில், "கண்ணாடி விரியன் பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இந்தியாவில் பாம்பு கடி மரணங்களில் பெரும்பாலானவை கண்ணாடி விரியன் பாம்புகளால் ஏற்படுகின்றன," என்றார்.



மேலும் அவர், "தற்போது கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு பெண் பாம்பும் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனுகின்றன. இந்த குட்டிகள் பல்வேறு இடங்களில் உலா வருகின்றன. பார்ப்பதற்கு மலைப் பாம்பு போல் இருப்பதால், இது விஷமற்றது என நினைத்து யாரும் பிடிக்க முயலக் கூடாது," என எச்சரித்தார்.

"பாம்புகளைக் கண்டால் அடித்துக் கொல்லக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு அல்லது பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, அதன் வாழ்விடத்தில் விடுவார்கள்," என்று விக்னேஷ் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் முரளி உயிரிழந்த சம்பவமும், ஒரு சிறுவன் பாம்பு கடியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...