கோவையில் கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை வேடப்பட்டியில் கண்ணாடி விரியன் பாம்பு கண்டுபிடிப்பு. இனப்பெருக்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் பிறக்கின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி நிபுணர் அறிவுறுத்தல்.



Coimbatore: கோவை வேடப்பட்டி பகுதியில் ஒரு வீட்டு வாசல் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தன்னார்வ அமைப்பான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு உறுப்பினரும், பாம்பு பிடி வீரருமான விக்னேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் அந்த இடத்திற்கு சென்று, பாம்பை பாதுகாப்பான முறையில் மீட்டு, வனத்துறை அறிவுறுத்தலின்படி அதன் வாழ்விடத்தில் விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கூறுகையில், "கண்ணாடி விரியன் பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இந்தியாவில் பாம்பு கடி மரணங்களில் பெரும்பாலானவை கண்ணாடி விரியன் பாம்புகளால் ஏற்படுகின்றன," என்றார்.



மேலும் அவர், "தற்போது கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு பெண் பாம்பும் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனுகின்றன. இந்த குட்டிகள் பல்வேறு இடங்களில் உலா வருகின்றன. பார்ப்பதற்கு மலைப் பாம்பு போல் இருப்பதால், இது விஷமற்றது என நினைத்து யாரும் பிடிக்க முயலக் கூடாது," என எச்சரித்தார்.

"பாம்புகளைக் கண்டால் அடித்துக் கொல்லக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு அல்லது பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, அதன் வாழ்விடத்தில் விடுவார்கள்," என்று விக்னேஷ் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் முரளி உயிரிழந்த சம்பவமும், ஒரு சிறுவன் பாம்பு கடியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...