உடுமலை அமராவதி அணைக்கு 20,000 கன அடி நீர்வரத்து: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணைக்கு நள்ளிரவில் 20,000 கன அடி நீர்வரத்து காரணமாக, பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நள்ளிரவில் திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், மறையூர், காந்தூலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்திருந்தது. ஆனால், நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவு 1:30 மணியளவில் அணைக்கு திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.



இதனால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ராளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு, கணியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 88.09 அடியாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,576 கன அடி நீர் உள்வரத்தும், 3,386 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் அணைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...