சேரகுலவேளாளர் சமூகத்திற்கு சலுகைகள் வழங்க கோரிக்கை: தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75வது பேரவை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டும் சலுகைகள் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேரமான் பெருமாள் நாயனாரின் 94-வது குருபூஜை வழிபாட்டு விழா மற்றும் தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75 ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சேரகுல வேளாளர் சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேரகுல சமூக பெண்கள் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றினர். இந்த நிகழ்வை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



பேரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் N.S. மணி, "சேர குல வேளாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் மோகன் அவர்களின் பரிந்துரைப்படி இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இதனால் இந்த சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

சேரகுலவேளாளர் சமூகத்திற்கு உரிய சலுகைகள் வழங்கப்படாததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...