திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் பாஜக மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக மேற்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.



கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "அடுத்த 500 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறோம். திருப்பூரில் இருந்து தமிழகத்திற்கு ஒரு முக்கிய செய்தியை கொடுக்க இருக்கிறோம். 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்பட உள்ளது, இது திருப்புமுனையாக அமையும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும், பாஜக முக்கிய தலைவர்களான எச். ராஜா, சரத்குமார், முருகானந்தம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், 66 மாவட்ட தலைவர்கள், 1,216 மண்டல தலைவர்கள், 180 மாநில நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...