திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் பாஜக மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக மேற்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.



கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "அடுத்த 500 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறோம். திருப்பூரில் இருந்து தமிழகத்திற்கு ஒரு முக்கிய செய்தியை கொடுக்க இருக்கிறோம். 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்பட உள்ளது, இது திருப்புமுனையாக அமையும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும், பாஜக முக்கிய தலைவர்களான எச். ராஜா, சரத்குமார், முருகானந்தம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், 66 மாவட்ட தலைவர்கள், 1,216 மண்டல தலைவர்கள், 180 மாநில நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...