திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் பாஜக மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் தமிழக மேற்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.



கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "அடுத்த 500 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறோம். திருப்பூரில் இருந்து தமிழகத்திற்கு ஒரு முக்கிய செய்தியை கொடுக்க இருக்கிறோம். 'திருப்பூர் டிக்லரேஷன்' அறிவிக்கப்பட உள்ளது, இது திருப்புமுனையாக அமையும்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும், பாஜக முக்கிய தலைவர்களான எச். ராஜா, சரத்குமார், முருகானந்தம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், 66 மாவட்ட தலைவர்கள், 1,216 மண்டல தலைவர்கள், 180 மாநில நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...