பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 28 மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தொடங்கியது. 28 மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சங்கம் மற்றும் பொள்ளாச்சி ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது. கோவை மற்றும் பொள்ளாச்சியில் ஆறு இடங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் 28 மாநிலங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. நேற்று இரவு பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் ஸ்கேட்டிங் வீரர்கள் அணிவகுப்போடு போட்டி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.



போட்டியில் காலில் சக்கர சூ அணிந்து போட்டியாளர்கள் மின்னல் வேகத்தில் சென்றது சுற்றி இருந்த பார்வையாளர்களை உற்சாகபடுத்தியது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

போட்டியின் தொடக்க விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போட்டி ஒருங்கிணைப்பாளர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், "இந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இது இளம் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்" என்றார்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...