உடுமலை அருகே பெரிய வாளவாடி குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு - விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார்

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியின் சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு குளம், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, விவசாயிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து தாசில்தார் அளவில் அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஒரு அமைப்பைச் சேர்ந்த சில விவசாயிகள் இடையூறு விளைவித்து வருவதாகவும், பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், வண்டல் மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர், லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றுக்கு வாடகை கொடுத்து நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று திரண்ட விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது விவசாயிகள், "பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குட்டையில் வண்டல்மண் அள்ளும் பணியை ஒரு சிலர் சுய லாபத்திற்காக தடுத்து இடையூறு செய்து வருகின்றனர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் வாளவாடி பகுதியில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...