கோவைக்கு அதிமுக கொண்டுவந்த திட்டங்களையே திமுக அரசு திறந்து வைக்கிறது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே திமுக அரசு திறந்து வைப்பதாக குற்றம்சாட்டினார். காவல்துறையுடன் அதிமுகவினர் வாக்குவாதம்.



கோவை: கோவையில் உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.



இன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மேம்பாலத்தை பார்வையிட்டார்.



இவரது வருகையொட்டி அதிமுகவினர் பாலத்தின் முன்பாக பட்டாசு வெடிக்க முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் பட்டாசுகளை பறிமுதல் செய்ததால், அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பாலத்தை காரில் சுற்றி பார்த்த எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.



எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முதல்வராக இருந்த ஜெயலிதா அவர்கள் சட்டபேரவையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்தார். அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

மேலும், "இந்த பாலம் வேலை முழுமையாக இன்னும் முடியவில்லை, அரசு விரைந்து முடிக்க வேண்டும். கோவைக்கு அதிமுக சார்பில் கொண்டு வந்த திட்டங்களை தான், திமுக அரசு திறந்து வைக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்ட மக்களின் மீது அன்பு வைத்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்காத திட்டங்களை எல்லாம் தந்துள்ளார். இந்த புதிய பாலத்தில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்களை காவல்துறையினர் எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...