தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் - 2024 ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில் மாணவர் நல மையத்தின் சார்பாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது.



மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர். நா. மரகதம் வரவேற்புரை வழங்கினார். அவர் தனது உரையில், கலந்து கொண்ட நிறுவனங்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாராட்டினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் அறிவியல் கல்வியில் முன்னோடியாக திகழ்வதோடு தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான திறன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர். இரா.தமிழ்வேந்தன் துவக்க உரையாற்றினார். வேலைவாய்ப்பு முகாம் 2024-ஐ வெற்றிகரமாக நடத்த உதவிய நிறுவனங்களைப் பாராட்டிய அவர், கலந்து கொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் அறிவு மற்றும் கற்றல் திறன் அடிப்படையில் பொருத்தமான வேலையைப் பெற ஊக்குவித்தார். இவ்வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனம், சேவைத் துறை, வங்கி, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற உதவுவதாக அவர் கூறினார்.

மேனாள் பேராசிரியர் முனைவர் ஜ.வெங்கிட் பிரபு இந்த வேலைவாய்ப்பு முகாமின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்களுக்கு விண்ணப்பம் தயாரித்தல், பொதுவிவாதம், நேர்காணல் போன்றவற்றிற்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

உதவி வேலைவாய்ப்பு ஆலோசகர் முனைவர். ச.கவிதா நன்றியுரை வழங்கினார். இந்த முகாமிற்கு உதவிய பேராசிரியர்கள் முனைவர்.மு.முத்துலட்சுமி, முனைவர்.கு.ம.செல்லமுத்து, முனைவர்.கி.தங்கராஜ் மற்றும் முனைவர்.சி.பிரதிபா ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முகாமில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் நோக்கம், வேலையின் தன்மை, ஊதியம் போன்ற விவரங்களை படத்தொகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...