பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு மருத்துவக் குழு அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அனுப்பப்பட்டது. மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மருத்துவர் மீரா தலைமையிலான குழு புறப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மருத்துவக் குழு அனுப்பப்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கலைவாணி கண்ணன் மகள் மருத்துவர் மீரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இன்று வயநாடு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து, மாத்திரை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்லும் மருத்துவ குழுவினரை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.



மருத்துவக் குழுவினரின் வாகனத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...