மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர், திருச்சி செல்லும் வழியில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார்.



அமைச்சர் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.



மாணவர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, பள்ளியில் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டறிந்தார்.



மாணவர்களிடம் பேசிய அமைச்சர், "தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பொதுத் தேர்வை எதிர்நோக்கி திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தமிழக முதல்வர் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது," என்றார்.

மேலும், "மாணவர்கள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றது. எனவே, மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்," என அமைச்சர் அறிவுறுத்தினார்.



இதைத் தொடர்ந்து, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கும் மாணவர்களிடம் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...