மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர், திருச்சி செல்லும் வழியில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார்.



அமைச்சர் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.



மாணவர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, பள்ளியில் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டறிந்தார்.



மாணவர்களிடம் பேசிய அமைச்சர், "தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பொதுத் தேர்வை எதிர்நோக்கி திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தமிழக முதல்வர் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது," என்றார்.

மேலும், "மாணவர்கள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றது. எனவே, மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்," என அமைச்சர் அறிவுறுத்தினார்.



இதைத் தொடர்ந்து, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கும் மாணவர்களிடம் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...