கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

படக்குழுவினர் கூறுகையில், "இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தழுவியே இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்" என்றனர்.

மேலும், "இசையமைப்பாளர் சியாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை தந்துள்ளார். VFX தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது. VFX நன்றாக வருவதற்காகவே அதிக நாட்கள் எடுத்துக் கொண்டோம்" என்றும் தெரிவித்தனர்.

அதே நாளில் மற்ற படங்களும் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, "வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும்" என்றார்.

அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, "தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2062ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...