கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்: அதியமான் வலியுறுத்தல்

கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வலியுறுத்தியுள்ளார். அரசு உடனடியாக சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்த அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உட்பட பல்வேறு பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அதியமான், "கோவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கான தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. இப்போதுள்ள அரசும் அதற்கு எதிராக இல்லை. முறையாக அணுகியிருந்தால் சிலை நிறுவப்பட்டிருக்கும்," என்றார்.



மேலும் அவர், "வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால் ஈரோட்டில் உடனடியாக டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசியபோது, மிக விரைவில் செம்மொழி பூங்காவிற்கான வேலைகள் தொடங்க உள்ளன. அந்தப் பூங்காவின் முன்னால் டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவலாம் என்று சொல்லி இருந்தார்," என்று கூறினார்.



"எனவே செம்மொழிப் பூங்காவில் கட்டாயமாக டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும். அரசு உடனடியாக முடிவு செய்து சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும். நாளை கோவை வரும் முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்," என்று அதியமான் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...