பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று ஒன்றிய குழு தலைவர் விஜய ராணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒரு மனதாக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலந்து கொண்ட உறுப்பினர்கள் கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.



மேலும், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களான மோகன் குமார், நாகமணி, தங்கமணி, பிரபு, நாகராஜன், அகிலாண்டேஸ்வரி, மாலினி, சிவக்குமார், மோகனாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...