வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை: முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் எச்சரிக்கை

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் எச்சரித்துள்ளார். முதல்வரின் கோவை வருகையின் போது வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மனு அளித்துள்ளார். அதில், நாளை கோவைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரை வெள்ளலூர் குப்பை கிடங்கையும் கைவிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட அழைத்து வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஈசுவரன் கூறுகையில், "நாளை கோவை வரும் தமிழ்நாடு முதலமைச்சர், கோவையின் முக்கிய பிரச்சினையான வெள்ளலூர் குப்பை கிடங்கை நேரில் வந்து பார்வையிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்களைப் பாதிப்பு உள்ளாக்கி இருக்கிற வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது" என்றார்.



"முதலமைச்சர் வந்தாலும் வராவிட்டாலும் உக்கடம் பாலத்தில் வாகனங்கள் ஓடும். ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு முதலமைச்சர் வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். கடந்த முறை முதலமைச்சர் வந்த போது உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அவசர வேலைக்காக வந்திருக்கிறார் அவரால் வர முடியாது என்று அதிகாரிகள் சொன்னதால், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நாளை கோவை வருகிற முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வந்த ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.



இறுதியாக, "இந்த முறை வெள்ளலூர் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு சொல்லாவிட்டால், அடுத்த முறை முதலமைச்சர் கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஈசுவரன் எச்சரித்தார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...