கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாநகரில் உள்ள மூன்று முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஆகஸ்ட் 8) பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பீளமேடு புதூர், பாரதி காலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு, சௌரிபாளையம், கணபதி தொழிற்பேட்டை, புலியகுளம், ராமநாதபுரம், ஆவாரம்பாளையம், திருச்சி ரோடு (பகுதி), உடையம்பாளையம், மீனா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம் (கோ இந்தியா பகுதி), வையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டை பாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், மொன்டகாளிபுதூர் மற்றும் காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவல்சின்னம்பாளையம், சமத்தூர், பாளையூர், தளவாய்பாளையம், பொன்னாபுரம், நாச்சிபாளையம், பொள்ளாச்சியூர், ஜமின்கொட்டாம்பட்டி, பில்சினாம்பாளையம், வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...