முகநூலில் மத அவதூறு கருத்து: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது வழக்கு

கோவையில் முகநூலில் மதங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை கண்காணிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகர பகுதியில் முகநூல் பதிவுகளில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் முகநூல் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, கோவையைச் சேர்ந்த தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் என்பவர் இரு மதங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பதிவுகள் இரு தரப்பினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என காவல்துறையினர் கருதினர்.

இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...