உலக தாய்ப்பால் வார விழா: பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு

பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.



இதைத் தொடர்ந்து, தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியம் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இணை உணவுகளோடு சேர்த்து தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது குறைந்து வருவதால், தாய்ப்பால் இல்லாமல் பல்வேறு வகையான மாட்டுப்பால், பவுடர் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இந்நிகழ்ச்சி தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...