அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் இடஒதுக்கீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற உத்திரவு படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தும் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள, பேராசிரியர்கள் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய படி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ரவிசங்கர் கூறுகையில், நீதிமன்றம் மூலமாகவோ, அவசர சட்டம் மூலமாகவோ மீண்டும் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்' என தெரிவித்தார்.

முன்னதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் வெளிநோயாளிகளாக சிகிச்சை எடுக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...