உடுமலை அருகே பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரியில் உள்ள பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரியில், புகழ்பெற்ற பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கியது.

முதல் நாளில், காலையில் கோ பூஜை, சுதர்சன ஹோமம், தன்வந்திரி, மகாலட்சுமி மற்றும் குபேர ஹோமம் நடைப்பெற்றது. ஆகஸ்ட் 5, 6 ம் தேதிகளில் உலக நன்மைக்காகவும் அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ துளசி மற்றும் ரோஸ் சம்மங்கி பூக்களால் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது.



இதற்கிடையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



பின்னர் மகா தீபாரதனையும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதைத் தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறுவர் சிறுமியர் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தனி சன்னதியில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு பால், தயிர், மஞ்சள் உட்பட பதினாறு வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



விழாவுக்கான ஏற்பாடுகளை குறுஞ்சேரி பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...