மேட்டுப்பாளையத்தில் கருணாநிதியின் 6வது நினைவு தினம் - திமுக சார்பில் அஞ்சலி

மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகர கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் முகமது யூனூஸ் மற்றும் முனுசாமி தலைமையில் இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.



நிகழ்வில், கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றிய கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பேசப்பட்டது. கட்சியினர் அவரது கொள்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...