கோவை வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு விழா வரும் வியாழன் அன்று நடைபெறுகிறது

கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்த பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 8 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா அரசின் அனுமதியுடன், Milacron India Private Limited (Mold Masters Division), Coimbatore நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பட்டாம்பூச்சிகளைப் பற்றிய அறிவு மையமாகவும் செயல்படவுள்ளது.

பட்டாம்பூச்சி பூங்காவின் திறப்பு விழா வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8, 2024) அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...