கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா-ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி தொடக்கம்

கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா-ஜெர்மனி இடையேயான முதல் கூட்டுப் போர் பயிற்சி ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பல நாடுகளின் விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான முதல் கூட்டுப் போர் பயிற்சி ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.



இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி மற்றும் ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோரின் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. பங்கேற்கும் வீரர்கள் 8 நாட்கள் கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் போர் விமானத்தை இயக்கி கோவையில் தரையிறங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய விமானப் படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சியை கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

மேலும் அவர், "ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுவரை இதுபோன்ற கூட்டுப் போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

"எதிர்வரும் 8 நாட்களும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும்" என்று இங்கோ கெர்ஹார்ட்ஸ் கூறினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...