உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.3.28 லட்சம் வசூல்

உடுமலை அருகே திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.3,28,403 வசூலானது. கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.



இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் வருகை தருகின்றனர்.



கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 12 பொது உண்டியல்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் ரூ.2,99,360 மற்றும் நாணயங்கள் ரூ.27,621 ஆக மொத்தம் ரூ.3,26,981 வசூலானது. கோசாலை உண்டியலில் இருந்து ரூ.1,422 வசூலானது. ஆக மொத்தம் அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து ரூ.3,28,403 வசூலானது.



இந்த உண்டியல் எண்ணிக்கை நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, உறுப்பினர்கள் ராஜபாலன், ராதாகிருஷ்ணன், பானுரேகா, தேவராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடைசியாக கடந்த ஜூன் 12 அன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...