தமிழ்புதல்வன் திட்ட தொடக்க விழாவிற்கு ரூ.5.50 லட்சம் நன்கொடை

கோவையில் நடைபெறவுள்ள தமிழ்புதல்வன் திட்டத் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுக்காக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் ரூ.5.50 லட்சம் நன்கொடை வழங்கியது.


கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக ரூ.5,50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 9, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இந்த நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முனைவர் என். யசோதா தேவி (செயற்குழு உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி), ஏ.எம்.கலீல் (புரவலர், டெக்சிட்டி கலை அறிவியல் கல்லூரி), பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன் (தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்), டி.சேதுபதி (செயலர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....