தமிழ்புதல்வன் திட்ட தொடக்க விழாவிற்கு ரூ.5.50 லட்சம் நன்கொடை

கோவையில் நடைபெறவுள்ள தமிழ்புதல்வன் திட்டத் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுக்காக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் ரூ.5.50 லட்சம் நன்கொடை வழங்கியது.


கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக ரூ.5,50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 9, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இந்த நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முனைவர் என். யசோதா தேவி (செயற்குழு உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி), ஏ.எம்.கலீல் (புரவலர், டெக்சிட்டி கலை அறிவியல் கல்லூரி), பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன் (தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்), டி.சேதுபதி (செயலர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...