காரமடையில் வீடு புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு

காரமடை குட்டையூரில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற தம்பதியின் வீட்டில் திருடர்கள் புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: காரமடை குட்டையூர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜு - அங்கம்மாள் ஆகியோரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 6) காலை வீடு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...