காரமடையில் வீடு புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு

காரமடை குட்டையூரில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற தம்பதியின் வீட்டில் திருடர்கள் புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: காரமடை குட்டையூர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜு - அங்கம்மாள் ஆகியோரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 6) காலை வீடு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...