உடுமலை அருகே ஆலங்குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளம் புதர் மண்டி காணப்படுவதால், குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிபட்டி ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆலங்குளம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், தற்போது புதர் மண்டி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜல்லிப்பட்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களுக்கு இந்த குளம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் நீர்வரத்தை தேக்கி வைக்கும் வகையில் குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி பராமரிப்பு செய்வதில் திமுக ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதன் காரணமாக மழைநீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்திற்கு நீர்வரத்தை அதிகரிக்கும் பொருட்டு, நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றி, குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...