கோவை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: மூளைச்சாவுக்குப் பின் 5 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்பாடு

கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பெற்றோரின் சம்மதத்துடன் 5 உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவை காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஸ்ரீராம் என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோரின் முடிவின்படி, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


கடந்த ஆகஸ்ட் 3 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி விழுந்த ஸ்ரீராம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 4 அன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.


தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 5 அன்று அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றில் கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.


இதன் பின்னர், ஸ்ரீராமின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் Dr. அ.நிர்மலா உள்ளிட்ட மருத்துவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த உன்னதமான உடல் உறுப்பு தானம் மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...