பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் புகார்

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வளாகத்தில் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த சில நாட்களாக சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிமுகவைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதனைத் தடுத்து மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். வெளியூரிலிருந்து மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிமுகவைச் சேர்ந்த சிலர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மாட்டு வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...