தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்: கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு கங்கா செவிலியர் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.


கோவை: கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் கோவை கங்கா மருத்துவமனை இணைந்து தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின. இந்நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பு மற்றும் காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.

கங்கா மருத்துவமனை நிறுவன இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலையில், டாக்டர் தனசேகர் ராஜா (மூத்த ஆலோசகர்- ஆர்தோ பிளாஸ்டி, கங்கா மருத்துவமனை) மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் ஆகியோர் தலைமையில் கொடியசைத்து நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த வினா-விடை மற்றும் பேச்சுப் போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கோவை என்ஜிஜிஓ காலனி ரயில்வே கேட் அருகில் வாகன நெரிசலை சீர்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு உதவினர்.



மேலும், துடியலூர் மற்றும் சாய்பாபா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு CPR (கார்டியோபல்மனரி ரெசஸிடேஷன்) என்னும் உயிர் காக்கும் முறையை கற்பித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கங்கா செவிலியர் கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பல்வேறு சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் காக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...