கோவையிலிருந்து வயநாட்டிற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு கோவையிலிருந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இது முதல் கட்ட உதவியாகும்.


Coimbatore: கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் விக்கி மற்றும் இளைஞர் அணித் தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களில் உடைகள், காலணிகள், போர்வை, தலையணை, பக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். முதல் கட்டமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை இப்பொருட்கள் கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வயநாடு மக்களுக்குத் தேவையான பொருட்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், பல தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...