துபாய் - கோவை இடையே தினசரி விமானம் இயக்க ஃப்ளை துபாய் ஆர்வம்!

கோவைக்கு சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்த ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் தினசரி விமானம் இயக்க தயார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவைக்கும் துபாய்க்கும் இடையே தினசரி விமான சேவை தொடங்க ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குறைந்த விலை விமான சேவை நிறுவனமான ஃப்ளை துபாய், இந்தியாவில் வாரத்திற்கு சுமார் 30 விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியாவில் 8 நகரங்களுக்கு விமான சேவை இயக்கினாலும், கோவைக்கு இதுவரை விமான இணைப்பு வழங்கப்படவில்லை.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சொகுசு பயண கண்காட்சியில் பேசிய ஃப்ளை துபாய் நிறுவனத்தின் இந்திய துணைக்கண்டத்திற்கான வணிக செயல்பாடுகளின் துணைத் தலைவர் பிரான் சதியதாசன், "கோவைக்கு கூடுதல் விமானங்களை இயக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். கோவை நகரம் எங்கள் சேவை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவுக்கான கொள்ளளவை அதிகரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் இங்குள்ள முக்கிய பிரமுகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அனுமதி கிடைத்தால், கோவையை துபாயுடன் இணைக்கும் தினசரி சேவையை குறைந்தபட்சம் இயக்க தயாராக உள்ளோம்," என்றார்.

இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில்தான் பெரிய வளர்ச்சி கதை உள்ளது என்றும், அந்த வகையில் கோவை முன்னணி நகரங்களில் ஒன்றாக உள்ளதாகவும், ஏற்கனவே உள்ளதை விட அதிக சர்வதேச விமானங்கள் இயக்கப்பட வேண்டிய நகரம் என்றும் பிரான் கருத்து தெரிவித்தார்.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வலவன் பேசுகையில், "கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள உள்ளது. சமீபத்தில் இரண்டு கூடுதல் வெளிநாட்டு இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் அழகிய கிரிக்கெட் மைதான கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். இது கோவைக்கு விளையாட்டு சுற்றுலாவை கொண்டு வரும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...