துபாய் - கோவை இடையே தினசரி விமானம் இயக்க ஃப்ளை துபாய் ஆர்வம்!

கோவைக்கு சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்த ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் தினசரி விமானம் இயக்க தயார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவைக்கும் துபாய்க்கும் இடையே தினசரி விமான சேவை தொடங்க ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குறைந்த விலை விமான சேவை நிறுவனமான ஃப்ளை துபாய், இந்தியாவில் வாரத்திற்கு சுமார் 30 விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியாவில் 8 நகரங்களுக்கு விமான சேவை இயக்கினாலும், கோவைக்கு இதுவரை விமான இணைப்பு வழங்கப்படவில்லை.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சொகுசு பயண கண்காட்சியில் பேசிய ஃப்ளை துபாய் நிறுவனத்தின் இந்திய துணைக்கண்டத்திற்கான வணிக செயல்பாடுகளின் துணைத் தலைவர் பிரான் சதியதாசன், "கோவைக்கு கூடுதல் விமானங்களை இயக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். கோவை நகரம் எங்கள் சேவை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவுக்கான கொள்ளளவை அதிகரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் இங்குள்ள முக்கிய பிரமுகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அனுமதி கிடைத்தால், கோவையை துபாயுடன் இணைக்கும் தினசரி சேவையை குறைந்தபட்சம் இயக்க தயாராக உள்ளோம்," என்றார்.

இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில்தான் பெரிய வளர்ச்சி கதை உள்ளது என்றும், அந்த வகையில் கோவை முன்னணி நகரங்களில் ஒன்றாக உள்ளதாகவும், ஏற்கனவே உள்ளதை விட அதிக சர்வதேச விமானங்கள் இயக்கப்பட வேண்டிய நகரம் என்றும் பிரான் கருத்து தெரிவித்தார்.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வலவன் பேசுகையில், "கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள உள்ளது. சமீபத்தில் இரண்டு கூடுதல் வெளிநாட்டு இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் அழகிய கிரிக்கெட் மைதான கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். இது கோவைக்கு விளையாட்டு சுற்றுலாவை கொண்டு வரும்," என்றார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...