'செய்தியாளர்கள் மொழி, இனம் பாகுபாடில்லாமல் இருக்க வேண்டும்' இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் மார்டின் ராஜா பேச்சு


கோவையில் உள்ள இளம் பத்திரிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், பயிற்சிப்பட்டறை ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, ஐந்தாவது பயிற்சிப்பட்டறை  நிகழ்வு இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக சன் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் மார்டின் ராஜா கலந்து கொண்டார். 



அப்போது அவர் 'காட்சி ஊடகவியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே பேசினார்.அவர் பேசியதாவது :- 

ஒவ்வொரு செய்தியாளரும் கொடுக்கும் செய்திகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். மாறாக, ஒரு செய்தியால் மக்களுக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்றால், அந்த செய்தியை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில் கடினமான வார்த்தைகளையோ அல்லது மிகைப்படுத்தும் விதமான வார்த்தைகளையோ பயன்படுத்த வேண்டாம். 

இன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்துவது தாம் செய்தி என்றாகிவிட்டது. உதாரணமாக கேரளா-தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே குடிநீர் கொடுத்து பெறுவது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஆனால், தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தமிழக ஊடகங்கள் கேரளாவிற்கு எதிராகவும், அங்கு உள்ளவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும் செய்திகளை பதிவு செய்வதை கைவிட வேண்டும். 

அதில் உள்ள பிரச்சனைகளை தீர ஆய்வு செய்து பின்னர் செய்தி வெளியிடுவது தான் பத்திரிக்கை தர்மம். 

மதம், இனம், மொழி மற்றும் மாநில எல்லைகளை கடந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும்  நடுநிலையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 



முன்னதாக, இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இடையே தொகுப்பாளர்-செய்தியாளர்கள், செய்தி வெளியிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...