கற்பகம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் தர குறியீடுகள் கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி "செவிலியர் தர குறியீடுகள்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரி சார்பில் "செவிலியர் தர குறியீடுகள்" (Quality Indicators in Nursing) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நடைபெற்றது.



தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் (DMChO) விஜயலட்சுமி, கற்பகம் கல்லூரியின் தலைவர் டாக்டர் ரா. வசந்த குமார், Chairman and Managing Trustee முருகய்யா, CEO வெங்கடேசன், Medical Director மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சுதா சிறப்பு கண்காணிப்பாளராக பங்கேற்றார்.



தொடர்ந்து, ஏழு சிறப்பு பேச்சாளர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இடையில் அறிவியல் சுவரொட்டி மற்றும் அறிவியல் காகித விளக்கக் காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்தனர். மொத்தம் 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்டு சிறப்பித்த பேச்சாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...