கற்பகம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் தர குறியீடுகள் கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி "செவிலியர் தர குறியீடுகள்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரி சார்பில் "செவிலியர் தர குறியீடுகள்" (Quality Indicators in Nursing) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நடைபெற்றது.



தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் (DMChO) விஜயலட்சுமி, கற்பகம் கல்லூரியின் தலைவர் டாக்டர் ரா. வசந்த குமார், Chairman and Managing Trustee முருகய்யா, CEO வெங்கடேசன், Medical Director மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சுதா சிறப்பு கண்காணிப்பாளராக பங்கேற்றார்.



தொடர்ந்து, ஏழு சிறப்பு பேச்சாளர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இடையில் அறிவியல் சுவரொட்டி மற்றும் அறிவியல் காகித விளக்கக் காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்தனர். மொத்தம் 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்டு சிறப்பித்த பேச்சாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...