கோவை நேரு விளையாட்டு அரங்கில் இரண்டாவது நாளாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. 11 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஐந்து நாட்களில் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாம், இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வருகின்றனர். பங்கேற்பாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் சுமார் 1,000 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மொத்தம் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...