கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு இரக மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர்.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் அவர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். புது தில்லியிலுள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையத்தின் (ASRB) பரிந்துரையின் படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்த நியமனத்தை செய்துள்ளது.

முனைவர் கோவிந்தராஜ் ஏற்கனவே கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், 1991-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்காக தேர்வானார்.

முனைவர் கோவிந்தராஜ் பயிர் இரகங்களை உருவாக்குதல், எரிசக்தி இரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை பெற்றோர்களாக பயன்படுத்தி புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட கோ 0232 மற்றும் கோ 0233 கரும்பு இரகங்கள் வட இந்தியாவில் பிரபலமானவை. மேலும், கோ 09004 கரும்பு இரகம் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க சாதனையாக, முனைவர் கோவிந்தராஜ் உருவாக்கிய SBIEC 14006 என்ற எரிசக்தி கரும்பு இரகம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவரது சிறந்த பங்களிப்புக்காக 'சர். T. S. வெங்கட்ராமன் சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது உட்பட பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும், முனைவர் கோவிந்தராஜ் ஃபிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு இரகங்கள் உருவாக்கத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். இந்த நியமனம் கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...