கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு இரக மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர்.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக முனைவர் P. கோவிந்தராஜ் அவர்கள் ஆகஸ்ட் 1, 2024 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். புது தில்லியிலுள்ள வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையத்தின் (ASRB) பரிந்துரையின் படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்த நியமனத்தை செய்துள்ளது.

முனைவர் கோவிந்தராஜ் ஏற்கனவே கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், 1991-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணிக்காக தேர்வானார்.

முனைவர் கோவிந்தராஜ் பயிர் இரகங்களை உருவாக்குதல், எரிசக்தி இரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை பெற்றோர்களாக பயன்படுத்தி புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட கோ 0232 மற்றும் கோ 0233 கரும்பு இரகங்கள் வட இந்தியாவில் பிரபலமானவை. மேலும், கோ 09004 கரும்பு இரகம் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்க சாதனையாக, முனைவர் கோவிந்தராஜ் உருவாக்கிய SBIEC 14006 என்ற எரிசக்தி கரும்பு இரகம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவரது சிறந்த பங்களிப்புக்காக 'சர். T. S. வெங்கட்ராமன் சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது உட்பட பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும், முனைவர் கோவிந்தராஜ் ஃபிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு இரகங்கள் உருவாக்கத் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். இந்த நியமனம் கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...