KMCH கல்லீரல் தொடர் பயிற்சி – 3 வைரஸ் ஹெப்பாடிட்டீஸ்… எளிதாக்குவோம்

KMCH கல்லீரல் மையத்தில் உள்ள மருத்துவர்கள் கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மற்ற பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பயிலரங்குகள் நடத்துவதிலும் தங்களை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.



இப்படி ஒரு முயற்சியைதான் ஒரு வருடம் முன்பு KMCH-ல் முன்வைத்து, தொடர்ந்து KMCH கல்லீரல் தொடர் என்னும் திட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என்று KMCH கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பயிற்சி வகுப்பை 22/04/2017 அன்று நடந்தது.

இம் முறை வைரஸ் கிருமியால் எற்படும் ஈரல் நோய்கள் சம்மந்தப்பட்ட கருத்தரங்கம் நடைபெற்றது . இந்தியாவில் ஏறக்குறைய  5 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ், டிபி,மலேரியா போன்ற நோய்களை விடஅதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த முக்கியமான செய்தி பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் .இந்த விழிப்புணர்வை எற்படுத்த இந்த கருத்தரங்கம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என டாக்டர் . விவேகானந்தன் தலைவர் - KMCH கல்லீரல் துறை  நம்புகிறார்.இந்த கருத்தரங்கத்தில் பொது மருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும் ,இரைப்பை மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டார்கள், இதன் சிறப்பு விருந்தினர்களாக தென் இந்தியாவின் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கே.எம்.சி.எச் டைரக்டர் டாக்டர். அருண் பழனிச்சாமி கூறியதாவது. எந்த வைரஸ் கிருமியை நாம் தவிர்க்க முடியும், ஹெப்பாடிட்டீஸ் எ & இ வைரஸ்கள் அசுத்தமான உணவுகளில் இருந்து வருகிறது , மற்றும் ஹெப்பாடிட்டீஸ் பி & சி வைரஸ்கள் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. நம் வாழ்வு முறையில் சுத்தமும் சுகாதாரத்தையும் கடைபிடித்தால்  இக் கொடிய நோய்களில் இருந்து தவிர்க்கலாம். 

இதற்கு தடுப்பூசிகளும் உள்ளது. வரும் முன் காப்போம் என்பதனை மனதில் கொண்டு கே.எம்.சி.எச் பல விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை பல்வேறு இடங்களில் நடத்திவருகிறது.

இந்த கருதரங்கத்தை நடத்தியதற்கு  கே.எம்.சி.எச், டீன் டாக்டர் .V.குமரன் அவர்களும் மற்றும்  கே.எம்.சி.எச்,மருத்துவ இயக்குனர்  டாக்டர்.A.N.முருகன் அவர்களும் கல்லீரல் குழுவை மிக சிறப்பாக பாராட்டி ஊக்குவித்தார்கள்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...