கொலை மிரட்டல்: பாமக மாவட்ட செயலாளர் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

கோவையில் MyV3 Ads மோசடி குறித்து புகார் அளித்த பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "கடந்த ஓராண்டு காலமாக 2000 கோடிகளுக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட MyV3 Ads நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்து வருகிறோம். பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில், MyV3 Ads நிறுவனம் 2451 கோடி முதலீடு பெற்று, ஒன்பதரை லட்சம் மக்களை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் MyV3 Ads செயலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது," என்றார்.



"ஆறு மாதத்திற்கு முன்பு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.



"பாமக தலைவர் பாதுகாப்பு அளிக்க கோரி அறிக்கை விடுத்துள்ளார். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி செய்பவர்களுக்கும், குண்டாஸ் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும், கூலிப்படையினருக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்கள்," என்று அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...