கொலை மிரட்டல்: பாமக மாவட்ட செயலாளர் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

கோவையில் MyV3 Ads மோசடி குறித்து புகார் அளித்த பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "கடந்த ஓராண்டு காலமாக 2000 கோடிகளுக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட MyV3 Ads நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்து வருகிறோம். பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில், MyV3 Ads நிறுவனம் 2451 கோடி முதலீடு பெற்று, ஒன்பதரை லட்சம் மக்களை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் MyV3 Ads செயலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது," என்றார்.



"ஆறு மாதத்திற்கு முன்பு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.



"பாமக தலைவர் பாதுகாப்பு அளிக்க கோரி அறிக்கை விடுத்துள்ளார். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி செய்பவர்களுக்கும், குண்டாஸ் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும், கூலிப்படையினருக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்கள்," என்று அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...