கோவை TNAU-வில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி: ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. பல்வேறு உணவு பொருட்களை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு வகையான தயார்நிலை உணவுகளை தயாரிக்கும் முறை கற்றுத் தரப்படும். இதில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், பிசிபெல்லா, பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ் ஆகிய உணவு பொருட்கள் அடங்கும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகையை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 94885 18268, 0422-6611268. மின்னஞ்சல்: [email protected].

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...